valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 August 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இப்பொழுது, நாம் ஏற்கெனவே ஆரம்பித்த, மச்சொதி ஜீரணோத்தாரணம் பற்றியும் ஸ்ரீ ராம ஜனன கதா கீர்த்தனம் பற்றியுமான காதையைத் தொடர்வோம்.

கோபால் குண்டட் என்ற பெயர் கொண்ட பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இடை விடாது பாபாவின் நாமத்தை ஜபம் செய்து வந்த பரம பக்தர்.

அவருக்குப் புத்திரப் பாக்கியம் இல்லாதிருந்தது. சாயியி னுடைய ஆசிர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திர ரத்தினம் பிறந்தான். அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

ஷீரடியில் கிராம மக்கள் அனைவரும் உல்லாசப்படும் வகையில் ஒவ்வொரு வருஷமும் ஒரு திருவிழா அல்லது உருஸ் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

தாத்யா கோதே, தாதா கோதே, மாதவராவ் தேச்பாண்டே போன்ற கிராம முக்கியஸ்தர்களும் இந்த யோசனையை மிகவும் விரும்பி அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

இம்மாதிரி திருவிழாக்கள் கொண்டாடுவது என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; ஜில்லா கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டிய நிர்பந்தமும் இருந்தது.

கலெக்டருடைய அனுமதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கிராமத்தின் கணக்கர் காழ்ப்புணர்வோடு விஷமத்தனமாக அதை எதிர்த்தார்; தடங்கல்களை ஏற்படுத்தினார்.

கிராமத்துக் கணக்கர் எழுப்பிய ஆட்சேபனைகளால், ஷீரடியில் திருவிழா கொண்டாடப் படக்கூடாது என்று கலெக்டர் ஆணையிட்டு விட்டார்.

ஆனால், பாபாவே ஷீரடியில் உருஸ் திருவிழா நடத்தும் யோசனையை விரும்பி, அவருடைய சம்மதத்தையும் ஆசிர்வாதத்தையும் அளித்திருந்தார்.

ஆகவே, கிராம மக்கள் மனவுறுதியுடன் இவ்விஷயமாக தொடர் முயற்சி எடுத்தனர்; படாதபாடு பட்டனர். அவர்கள் எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில், முன்னர்ப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதிகாரிகளால் ரத்து செய்யப் பட்டது;

அதிலிருந்து, பாபாவினுடைய சம்மதத்துடன் இந்த வருடாந்திர உருஸ் திருவிழாவை ஸ்ரீ ராமநவமியன்று கொண்டாடுவது என்று முடிவு செய்யப் பட்டது. தாத்யா கோதே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இத் திருவிழாவிற்குத் தற்காலத்திலும் மக்கள் திரள்திரளாக வருகிறார்கள்.

ஸ்ரீ ராம நவமியன்று மேளதாளத்தோடு வாத்தியங்களும் முழங்க, பூஜையும் பஜனையும் செய்யப் படுகின்றன. உற்சவத்தில் கலந்து கொள்ள மக்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்து ஷீரடியில் குவிகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய கொடிகள் மரியாதையாகச் சடங்குகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லாபட்டு, நிரந்தரமாக பறந்துகொண்டிருக்குமாறு மசூதியின் உச்சியில் கட்டப்படும். 



No comments:

Post a Comment