valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தோதி போதி, கண்ட யோகம் போன்ற பாபாவின் யோக சாதனைகள், மற்றும் அவர் எப்படி பக்தர்களின் கர்ம வினைகளால் ஏற்பட்ட உபாதைகளைத் தம்முடைய உடலில் ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியெல்லாம் முறைப்படி, எதுவும் விட்டுப் போகாமல் பிறகு சொல்லப்படும்.

ஹேமாட் பணிவுடன் சாயியை சரணடைகிறேன். இந்தப் பிரவசனம் அவருடைய பிரசாதமேயாகும். இப்புண்ணியமான காதையைக் கேட்பதாலேயே எல்லாப் பாவங்களும் அழிக்கப்படும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரிசமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'காணாமற் போனதும் ஷீரடிக்கு திரும்பி வந்ததும்' என்னும் ஐந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு  அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சாயி என்னும்  சொல்லுக்கு (சுலோகம் 25 ), சமகால அவதார புருஷரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர், கர்தாபஜா பிரிவினரைப் பற்றப் பேசியபோது அளித்த விளக்கம் கீழ்கண்டவாறு:
     "பிர்வர்தகர்கள் நெற்றியில் திலகமும் கழுத்தில் மாலையும் அணிவார்கள்; புற ஆசாரங்களை கடைபிடிப்பார்கள். சாதகர்கள் புற விஷயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்; உதாரணமாக பௌல்கள். இறவன் இருக்கிறார் என்பதில் சரியான நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீ சைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டதுமட்டுமல்லாமல், அவருடன் எப்போதும் பேசுகின்றனர். நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை கர்த்தபஜாக்கள் சாயி என்கின்றனர். சாயிக்குமேல் உயர்ந்த நிலை இல்லை."


No comments:

Post a Comment