valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 July 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதை விடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வதை விடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் சமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.

இக் காதையின் முக்கியமான பாடம் இதுவே. ஆயினும், தம்முடைய அஹங்காரத்தை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக் கூடிய தைரியம் இருப்பவரும் (தீர்மானத்தின் படி செயல் பட்டு) அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப் பிடிப்பவரும் அபூர்வமானவரே!

இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமார்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய வேண்டுமென்று விரும்புபவர். அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.

பூத உடலிலிருக்கும் அபிமானத்தை எரித்துவிட்டவரே, எடுத்த ஜென்மத்தின் நிறைவைக் காண முடியும். பிறகு, அவர் முக்திபெருவதற்காக யாரிடமாவது சிஷ்யராக இருப்பதை ஏற்பார்.

(பாபாவின்) இளமையும் கவர்ச்சியும் நிறைந்த உருவத்தில், பற்றற்ற மனமும் இருந்ததைப் பார்த்த பெரியோர்களும் சிறியோர்க்களுமாகிய அணைத்து மக்களும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஞானிகளின் தேக சம்பந்தமான நிகழ்சிகளும் அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படியேதான் நடக்கின்றன. இருப்பினும், வினையின் பாரத்தை அவர்கள் சுமப்பதில்லை. காரணம், "செயல்புரிபவன் நான்" என்ற எண்ணமே அவர்களுக்கு இருப்பதில்லை.

சூரியன் எப்படி இருட்டில் இருக்க முடியாதோ, அப்படியே ஒரு ஞானி துவைத பாவத்தில் இருக்க முடியாது. ஏனெனில், இப் பிரபஞ்சமே அவரிடதில்தான் இருக்கிறது. அவர் அத்வைத பாவத்தில் வாழ்கிறார்.

இந்த குரு சிஷ்ய சரித்திரத்தை, பரம பக்தரான மஹால் சாபதி விவரித்த விதமாகப் பிரவசனம் செய்தாகி விட்டது.

இக் காதை இவ்வாறு நிறைவடையட்டும். அடுத்த காதை இதை விட ஆழமானது. கிரமப் படி சொல்லப்படும்; கேட்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.

மசூதியுனுடைய நிலைமை எவ்வாறு இருந்தது? எவ்வளவு முயற்சியால் அது சீர்படுத்தப் பட்டது? சாய் ஹிந்துத்வா முஸ்லீமா என்று உறுதியாக எவருக்குமே தெரியாதது எப்படி ? (என்பது பற்றியெல்லாம் சொல்லப் போகிறேன்)


No comments:

Post a Comment